பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாளத்தில் புகழ்பெற்ற பெண் எழுத்தாளர் கமலாசுரையா. புகழ்பெற்ற நூல்களை எழுதியதுடன் தனது இறுதி காலத்தில் இஸ்லாம் மதத்துக்கு மாறி பரபரப்பு கிளப்பியவர். தற்போது இவரது வாழ்க்கை வரலாறு மலையாளத்தில் சினிமாவாகிறது. மலையாளத்தின் முதல் இயக்குனரான கே.சி.டேனியலின் வாழ்க்கையை படமாக எடுத்த கமல் இயக்குகிறார்.
இதில் கமலா சுரையாவாக நடிக்கிறார் வித்யா பாலன். கமலா சுரையா வேடத்தில் நடிப்பதற்காக அவரை பற்றி முழுமையாக படித்து வருகிறார் வித்யா பாலன். கமலா சுரையா எழுதிய நூல்களை மட்டுமல்லாது கமலாவின் சுயசரிதையையும் படித்து வருகிறார். அண்மையில் கமலா சுரையாவின் வீட்டிற்கு சென்று பார்த்து வந்துள்ளார். ஒரு கேரக்டராக நடிக்க ஒத்துக் கொண்டால் அந்த கேரக்டராக மாறிவிடுகிற நடிகைளில் வித்யாபாலன் முக்கியமானவர். அந்த வகையில் வித்யா பாலன் இப்போது கமலா சுரையாவாக மாறிக் கொண்டிருக்கிறார். பிருத்விராஜ் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். கமலா சுரைய்யாவின் கணவராக முரளி கோபி நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்குகிறது.