இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
இயக்குநர் நீரஜ் பாண்டே மற்றும் நடிகர் அக்ஷ்ய் குமார் ஆகியோர் இடையே நல்ல நட்பு இருந்து வருகிறது. இருவரும் ‛ஸ்பெஷல்-26', ‛பேபி' போன்ற படங்களில் இணைந்து பணியாற்றினர், அந்த படங்களும் வெற்றி பெற்றன. தொடர்ந்து படங்களில் இணைய உள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து அக்ஷ்ய் உடன் இணைந்து பணியாற்ற என்ன காரணம் என்று நீரஜ் பாண்டேவுடன் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛பெரிய ஸ்டார் நடிகர் என்பதால் மட்டும் அக்ஷ்ய் குமாருடன் தொடர்ந்து பணியாற்றவில்லை. எங்களுக்குள் நல்ல புரிதல் உள்ளது. அவர் மீது எனக்கும், என் மீது அவருக்கும் அதீத நம்பிக்கை இருக்கிறது. நான் எப்பவும் அவரிடத்தில் ஒரு படத்தில் நடிக்க கேட்கும்போதெல்லாம் அந்த ரோலுக்கு அவர் செட் ஆவார் என்பதால் தான் தொடர்ந்து அவருடன் பயணிக்கிறேன் என்று கூறியுள்ளார்.