தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மலையாளத்தில் சூப்பர்ஹிட்டான பிரேமம் படம் தெலுங்கில் நாக சைதன்யா, ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகி வருகிறது. இதில் சாய் பல்லவி நடித்த மலர் கேரக்டரில் ஸ்ருதிஹாசன் நடித்திருப்பது பலரின் கிண்டலுக்கும் ஆளாகி இருக்கும் நிலையில் நாக சைதன்யாவும் எந்த அளவுக்கு நிவின்பாலி கேரக்டருக்கு மரியாதை செய்திருப்பார் என சந்தேகம் எழுந்துள்ளது. ஆனால் இதற்கு தன்னிலை விளக்கம் அளிக்கும் விதமாக, நிவின்பாலி அளவுக்கு நடிக்காவிட்டாலும் தன்னால் இயன்ற அளவுக்கு நடித்துள்ளதாக கூறி ஜகா வாங்கியுள்ளார் நாக சைதன்யா.
மேலும் நிவின்பாலி பற்றி அவர் கூறுகையில், “நிவின்பாலியிடம் இருந்து கற்றுக்கொள்ள ஏராளம் இருக்கிறது.. அவரது நடிக்கும் ஸ்டைல் என்பது ஒரு பாடப்புத்தகம் மாதிரி.. குறிப்பாக கல்லூரி மாணவனாக அவர் அந்த கதாபாத்திரத்தை பிரதிபலித்திருந்தது என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் செய்துவிட்டது.. முன்கோபி கேரக்டர்தான் என்றாலும் அதை இயல்பான நகைச்சுவை உணர்வால் அழகாக பேலன்ஸ் செய்திருந்தார். நான் என்னளவுக்கு என்னுடைய ஸ்டைலில் அந்த கேரக்டரை சரியாக செய்திருக்கிறேன் என நினைக்கிறேன்” என்று கூறியுள்ளார் நாக சைதன்யா.