ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பாலிவுட்டின் பிரபல இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், ‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தை இயக்கி வருகிறார். இதில் ரன்பீர்கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இருதினங்களுக்கு முன்னர் இப்படத்தின் டீஸர் வெளியிடப்பட்டது. டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. ஆனால் அமிதாப் குடும்பத்தினர் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன்...?, எதற்காக...?
‛ஏ தில் ஹே முஷ்கில்' படத்தில் ஐஸ்வர்யாவும், ரன்பீரும் மிகவும் நெருக்கமாக நடித்துள்ளனர். இந்த காட்சிகளை பார்த்துவிட்டு அபிஷேக், அமிதாப்பச்சன் உள்ளிட்ட குடும்பத்தார் ஐஸ்வர்யா ராய் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்களாம்.
இதனிடையே இப்படத்தின் கதையை சொல்லும்போதே இதுபோன்ற காட்சிகள் எல்லாம் இருக்கிறது என்று ஐஸ்வர்யா குடும்பத்தினரிடம் கரண் ஜோகர் கூறியதாகவும், ஆனால் அப்போது யாரும் எதிர்ப்பு தெரிக்கவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் படம் ரிலீஸாகும் போது ரன்பீர்-ஐஸ்வர்யா இருக்கும் நெருக்கமான காட்சிகளை நீக்கும்படி அமிதாப் குடும்பத்தார் தரப்பிலிருந்து கேட்டு கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.