டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் பிரபல கவர்ச்சி நடிகையும், சர்ச்சை நாயகியுமான ராக்கி சாவந்த், தற்போது ஷீனா போரா கொலை வழக்கை அடிப்படையாக கொண்டு உருவாகி வரும் ‛ஏக் கஹானி ஜூலி கி' என்ற படத்தில் ஷீனாவின் அம்மாவான இந்திராணி ரோலில் நடித்துள்ளார். இப்படம் அடுத்தவாரம் வெளியாக உள்ளது. இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தன் மார்பகத்தை ஆபரேஷன் மூலம் பெரிதாக்கியுள்ளது கூறியுள்ளார்.
இதுகுறித்து ராக்கி மேலும் கூறியதாவது... ‛‛நான் என்னுடைய மார்பகத்தை பெரிதாக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டுள்ளேன். இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது. பாலிவுட்டில் இருக்கும் பல பிரபலங்கள் பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார்கள். அவர்களின் உடலில் இருக்கும் பிளாஸ்டிக்குகளை எல்லாம் ஒன்று சேர்த்தால் மூன்று டிரக் அளவுக்கு சேகரித்து விடலாம். நான் ஆபரேஷன் செய்து கொண்டதை நேர்மையாக ஒப்பு கொண்டேன், மற்றவர்கள் செய்வார்களா.? என்று கூறியுள்ளார்.