வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
எம்.ஜி.ஆர், பானுமதி, பத்மினி, ஈ.வி.சரோஜா, டி.எஸ்.பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம் நடித்த படம் மதுரை வீரன். புகழ்பெற்ற இந்தப் படத்தை ஒரு துணை இயக்குனர்தான் இயக்கினார் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை.1956ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படத்தை லட்சுமணன் செட்டியார் தயாரித்தார், ஜி.ராமநாதன் இசை அமைத்தார்.
இந்தப் படத்தை முதலில் இயக்கியவர் அன்றைய பிரபல இயக்குனர் டி.ஆர்.ரகுநாத். இவரும் எம்.ஜி.ஆரும் பால்ய பருவத்தில் இருந்தே உயிருக்கு உயிரான நண்பர்கள். இருவரும் ஒரே நாடக கம்பெனியில் சேர்ந்து வேலை செய்தவர்கள். சினிமாவிற்கு இவர் இயக்குனராகவும், எம்.ஜி.ஆர் நடிகராகவும் வந்தார்கள். வயதில் மூத்தவரான டி.ஆர்.ரகுநாத், எம்.ஜி.ஆரை "டேய் ராமச்சந்திரா, நீ... வா... போ..." என்று ஒருமையில்தான் அழைப்பார்.
ஒரு நாள் ஏவிஎம் ஸ்டூடியோவில் மதுரை வீரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரை பார்க்க ஏராளமான ரசிகர்கள் வந்திருந்தனர். அப்போது டி.ஆர்.ரகுநாத் எம்.ஜி.ஆரை "டேய் ராமசந்திரா... இங்கே வா....அங்கே போ..." என்று ஒருமையில் அழைத்திருக்கிறார். இது எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. "மவனே வெளியில வா உன்னை உண்டு இல்லேன்னு பண்ணிடுறோம்" என்ற ரசிகர்கள் சத்தம் போட்டிருக்கிறார்கள். எம்.ஜி.ஆர் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பிவிட்டு. ரகுநாத்திடம் வந்து "அண்ணே என்னை வாடா போடான்னு சொல்றதுக்கு உங்களுக்கு முழு உரிமை இருக்கு. ஆனால் தனியாக இருக்கும்போது அந்த உரிமையை எடுத்துக்குங்க. பொது இடத்துல பேசுறதுனால எனக்கு ஒண்ணும் இல்ல. என் ரசிகர்களால் உங்களுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயப்படுறேன்" என்று கூறினார். "சரி இனி அப்படி நடக்காது" என்று கூறியிருக்கிறார்.
என்றாலும் அடுத்தடுத்த நாளில் பழக்க தோஷத்தில் வாடா போடா வந்து விடுவதால் இனி எம்.ஜி.ஆரை தான் இயக்குவது சரியாக இருக்காது என்பதை உணர்ந்த அவர் தனது உதவியாளர் டி.யோகானந்தை இயக்க வைத்தார். இந்த யோகானந்த் தான் பிற்காலத்தில் புகழ்பெற்ற பல படங்களை இயக்கியவர்.