தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கமல்ஹாசனுக்கு உலக புகழ்பெற்ற செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜிக்கு பிறகு கலைத்துறையில் இந்த விருதை பெறுகிறவர் கமல். இதற்காக கமலை திரையுலகமே திரண்டு நேரில் சென்று வாழ்த்தியது. தமிழக அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் வாழ்த்தினார்கள். தமிழக முதல்வர் வாழ்த்தவில்லை. ஆனால் கேரள முதல்வர் பினராயி விஜயன் கமலுக்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார். அதில் "இந்திய சினிமாவை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் உங்களுக்கு கிடைத்திருக்கும் கவுரவம்" இது என்று எழுதியிருந்தார்.
இந்த கடிதத்திற்கு கமல் பதில் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: செவாலியே விருது கிடைத்த எனக்கு வாழ்த்து தெரிவித்தமைக்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். தங்களிடம் இருந்து வாழ்த்து கடிதம் வந்ததை அறிந்த என் நண்பர்கள் பிற மாநில முதல்வர் வாழ்த்து அனுப்பியதற்கு ஆச்சர்யப்பட்டார்கள். நீங்கள் பிற மாநில முதல்வர் அல்ல, எனக்கும் நீங்கள்தான் முதல்வர் என அவர்களிடம் கூறினேன் என்றதோடு, கமல்அந்த கடிதத்தில், நீங்கள் மலையாள சினிமா பார்க்கும் எந்த ஒரு மலையாளியையும் கேட்டுப் பாருங்கள், கமல் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று? தன் பாணியில் ஒரு புதிரும் போட்டு குழப்பிவிட்டுள்ளார் கமல்.