பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி | இந்த வருடத்திற்கான ஓடிடி கதவுகள் மூடப்பட்டு விட்டன : விஷால் எச்சரிக்கை மணி | ஈரோட்டில் ரசிகர்களை சந்தித்த த்ரிஷா | வித்யாபாலன் டிவியில் பார்த்த முதல் பாடல், எது தெரியுமா ? | 'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? |
செலிபிரிட்டி பேட்மிண்டன் லீக் ஆட்டத்தில் விளையாட இருக்கும் சென்னை ராக்கர்ஸ் அணியின் வீரர்களையும், விளம்பர தூதரையும் அறிமுகம் செய்யும் விழா நேற்று இரவு 7 மணி அளவில் சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சங்கத்தலைவர் நாசர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது நாசர் பேசுகையில், படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தபோதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு என்னை ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டதால் வந்திருக்கிறேன். என் வாழ்நாளிலே அற்புதமான நாட்கள் என்றால் நடிகர் சங்கத்துக்காக நடத்திய நட்சத்திர கிரிக்கெட் விளையாட்டு நடந்த நாட்கள்தான். அதில் என் பிள்ளைகள் அனைவரும் விளையாடினார்கள். மறக்க முடியாத நல்ல நிகழ்வாக அது அமைந்தது.
இப்போது இந்த நிகழ்ச்சியில் ஒரு சந்தோசமான விசயம் என்னவென்றால், கிரிக்கெட் மட்டும்தான் இந்தியாவில் பிரதானமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது பேட்மிண்டன் உள்ளிட்ட விளையாட்டுகளையும் மக்கள் ரசிக்கத் தொடங்கி விட்டனர். அதோடு, விளையாட்டு என்றாலே படிக்காதவன், கடைசி பெஞ்சு மாணவர்கள்தான் என்றிருந்த நிலை மாறி இப்போது நன்றாக படிப்பவர்களும் விளையாட்டில் ஆர்வம் காட்டுகின்றனர். இது வரவேற்க வேண்டிய விசயம். இது விளையாட்டுத்துறையில் இந்தியா சிறந்து விளங்கு வதற்கான அறிகுறியாக உள்ளது என்றார்.