ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
விஜய் தற்போது நடித்துவரும் ‛விஜய்-60' படத்தின் கதாநாயகிகளாக ஒரே நேரத்தில் மலையாள திரையுலகை சேர்ந்த இருவர் நடிக்கிறார்கள் என்பது புதுமையான விஷயம் தான். இதில் ஒரு ஹீரோயினான கீர்த்தி சுரேஷ், தமிழில் ரஜினி முருகன்' மூலமாக அழுத்தமாக ரசிகர்கள் மனதில் பதிந்துவிட்டார்.. இன்னொருவரான அபர்ணா வினோத் விஜய் படம் மூலமாகத்தான் தமிழுக்கு அறிமுகமே ஆகிறார். இந்தப்படத்தில் நடிப்பதற்காக படப்பிடிப்பு தளத்திலேயே தமிழ் டியூசன் கற்றுக்கொள்கிறாராம் அபர்ணா வினோத்.
தமிழ்ப்படத்தில் நடிக்கும் அனுபவம் எப்படி என அவரிடம் கேட்டதற்கு, விஜய் படத்தில் நான் நடிக்கிறேன் என்கிற பிரமிப்பு இருக்கிறதே தவிர, மற்றபடி தமிழ்ப்படத்தில் நடிக்கிறோம் என்கிற உணர்வே இல்லை என்கிறார் அபர்ணா. பின்னே இந்தப்படத்தில் அவருக்கு தோழியாக நடிப்பது மலையாளத்தை சேர்ந்த கீர்த்தி சுரேஷ்.. அப்பாவாக நடிப்பது மலையாள நடிகரான விஜயராகவன்.. கீர்த்தியின் அம்மாவாக நடிப்பது மலையாள நடிகையான சீமா. இதுநாள் வரை படமாக்கப்பட காட்சிகள் அனைத்திலும் இவர்களுடனேயே நடித்ததால் மலையாள திரையுலகில் இருக்கும் உணர்வுதான் அபர்ணாவுக்கு இருந்ததாம்.
ஆனால் ஒரே ஒரு மனக்குறை. இதுவரை நடித்த காட்சிகளில் விஜய்யுடன் இணைந்து நடிக்கவில்லையாம். இனிமேல் தான் விஜய்க்கும் இவருக்குமான காட்சிகளை எடுக்க இருக்கிறார்களாம். அதனால் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கும் நாளை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார் அபர்ணா வினோத்.