இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
அரிமாநம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் இரு வேடங்களில் நடித்துள்ள படம் இருமுகன். முதன்முறையாக விக்ரம் ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் செப்டம்பர் 8-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. படத்தின் புரமோஷன் வேலைகளில் தயாரிப்பளார் ஷிபு தமீன்ஸ் பரபரப்பாக இயங்கி வருகிறார். அவரது சொந்த ஊர் கேரளா என்பதால், அங்கே புரமோஷன் நிகழ்ச்சிய சமீபத்தில் நடத்தினார். இதில் விக்ரம் சந்தோஷமாக கலந்துகொள்ள, வழக்கம்போல நயன்தாரா மட்டும் மிஸ்ஸிங்.
விழா நடக்கும் திறந்தவெளி மைதானத்திற்கே விக்ரமை தனி ஹெலிகாப்டரில் அழைத்து வந்து ஆச்சர்யப்படுத்தினார் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ். அது மட்டுமல்ல விக்ரம் ஹெலிகாப்டரை விட்டு இறங்கி நடந்து வரும்போது செண்டமேளம் கொட்ட கேரளா பெண்கள் பரதநாட்டியத்துடன் அவரை வரவேற்க சந்தோஷத்தின் உச்சிக்கே சென்றார் விக்ரம்.. தான் தமிழில் ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல், பட வாய்ப்புகள் இல்லாத காலகட்டத்தில் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து அழகு பார்த்தது மலையாள திரையுலகம் தான். அதனால் விக்ரமிற்கு கேரளாவின் மீது எப்போதுமே தனி பாசம் உண்டு. இந்த முறை ஷிபு தமீன்ஸ் காட்டிய தடபுடல் வரவேற்பு அவரை இன்னும் கேரளாவுடன் நெருக்கப்படுத்தியுள்ளது.