டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் படம் எடுக்கப்படுகிறது என்று சொன்னாலே ரசிகர்களுக்குப் பெரும் சந்தேகம் வந்துவிடும். ஏதாவது ஒரு மொழியில் மட்டும் படத்தை உண்மையாக எடுத்துவிட்டு அடுத்த மொழியில் டப்பிங் செய்து வெளியிடுவார்கள். ஆனால், அதை இரு மொழிப் படம் அதாவது 'பை-லிங்குவல்' என ஆணித்தரமாகச் சொல்வார்கள். 'பாகுபலி' படம் கூட இரு மொழிப் படம் என்றுதான் சொன்னார்கள். ஆனால், பாடல் காட்சிகளிலும் பல காட்சிகளிலும் தெலுங்கு உதட்டசைவுதான் இருந்தது. இருந்தாலும் மற்ற பிரமிப்புகளில் ரசிகர்கள் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் உண்மையிலேயே இரு மொழிப் படம்தான் என சத்தியம் செய்யாத குறையாகச் சொல்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இந்தப் படம் ஆரம்பமானதும் ஐதராபாத்தில், தொடர்ந்து படப்பிடிப்பு நடந்து வருவதும் ஐதராபாத்தில்தான். சென்னையில் படப்பிடிப்பு நடந்ததாகச் சொன்னார்கள், ஆனால், அப்படி எதுவும் நடந்ததாக எங்கும் தகவல் இல்லை. தற்போதும் படப்பிடிப்பு ஐதராபாத்தில்தான் நடந்து வருகிறது.
இதனால், தமிழ்த் திரைப்படத் தொழில்நுட்பக் கலைஞர்கள் அந்தப் படத்தில் பணி புரியும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் படமாக்கப்படும் தமிழ்ப் படங்களுக்கு மட்டுமே வரி விலக்கு அளிக்க வேண்டும் என தமிழார்வலர்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால், அதை தயாரிப்பாளர் சங்கமும், அரசும் கண்டு கொள்வதாகத் தெரியவில்லை. 'ஃபெப்ஸி' ஊழியர்கள் இது குறித்து இன்னும் போராட வேண்டும் என சென்னையைச் சேர்ந்த மூத்த ஃபெப்ஸி உறுப்பினர் ஒருவர் நம்மிடம் தெரிவித்தார்.