டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ரஜினி படங்களுக்கு மக்கள் மத்தியில் இந்தளவுக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், அவற்றில் முக்கியமான காரணம்... ஒவ்வொரு படங்களுக்கும் இடையில் அவர் எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிதான். அந்த இடைவெளிதான் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பை எகிற வைத்தன.
ஆனால் தற்போது ரஜினியிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 'எந்திரன்' 2ஆம் பாகத்தின் அறிவிப்புக்குப் பின்னர், கபாலி படம் திடீரென அறிவிக்கப்பட்டது.
அதோடு மளமளவென உருவாகி, மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்துடன் வெளியாகி, வசூல் மழையும் பொழிந்தது. இப்போது 'எந்திரன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஷங்கர் இயக்கிவரும் '2.0' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் தற்போது நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார். இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் செப்டம்பரில் நிறைவடையும் எனத் தெரிகிறது.
இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் தன்னுடைய 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிப்பில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியை வெளியிட்டிருக்கிறார் தனுஷ். இப்படத்தையும் 'கபாலி' பட இயக்குநர் பா.ரஞ்சித்தே இயக்கவிருக்கிறார். இது கபாலி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். உண்மையில் கபாலி படக்குழுவினர் இணைகிறார்களே தவிர கபாலி படத்தின் இரண்டாம் பாகம் அல்ல என்கிறது பா.ரஞ்சித் தரப்பு.