தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
செப்டம்பர் -2 தீர்ப்பு. தண்டனை? என்ற வாசகத்துடன் ஒரு போஸ்டர் சென்னை உட்பட பல்வேறு ஊர்களில் ஒட்டப்பட்டிருந்தது. இது எதற்கான போஸ்டர் என்று தெரியாமல் மக்கள் முழித்தனர். முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பு பற்றியதாக இருக்குமோ என்று உளவுத்துறைக்கு டென்ஷன். டென்ஷனில் பதைபதைத்துப்போய்விட்டனராம்.
சுறுசுறுப்பான காவல்துறையினர், போஸ்டரை அச்சிட்ட அச்சகத்தை கண்டுபிடித்து குறிப்பிட்ட அந்த போஸ்டரை அச்சிட்டது யார் என்று விசாரித்துள்ளனர். அச்சக நிர்வாகம் சம்மந்தப்பட்ட ஆட்களை அடையாளம் காட்டி இருக்கின்றனர். போஸ்டர் அச்சடிக்க கொடுத்தவர்கள் யார் என்று தெரிந்ததும் உளவுத்துறையினர் நிம்மதிப் பெருமூச்சுவிட்டிருக்கின்றனர். அதோ சம்மந்தப்பட்டவர்களை அழைத்து செல்லமாக கடிந்து கொண்டனராம். அது சரி..... இப்படியொரு ஏடாகூடமான போஸ்டரை ஒட்டியது யார்?
காக்கா முட்டை மணிகண்டன் இயக்கத்தில் விதார்த் நடித்துள்ள படம் - குற்றமே தண்டனை. செப்டம்பர் 2 ஆம் தேதி அன்று வெளியாகவிருக்கும் இந்தப் படத்தை கே.ஆர்.பிலிம்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. குற்றமே தண்டனை படத்தில் ஒரு குற்றம் நடைபெறுகிறது. அந்த குற்றம் செய்தவர்களுக்கு எப்படி தண்டனை கிடைக்கிறது என்பதுதான் படத்தின் மிச்சகதை. இதை சூசகாக வெளிப்படுத்துவதுபோல் இப்படி ஒரு போஸ்டரை ஒட்டினார்களாம்.