ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
'கபாலி' படத்திற்கு முன்பாகவே சூர்யா நாயகனாக நடிக்கும் படம் ஒன்றை இயக்க பா.ரஞ்சித் அட்வான்ஸ் வாங்கியிருந்தார். ஆனால், திடீரென ரஜினி தரப்பிலிருந்து அழைப்பு வரவே, பெருந்தன்மையாக பா.ரஞ்சித்தை, ரஜினிகாந்தின் படத்தை இயக்க அனுப்பி வைத்தனர். 'கபாலி' படம் முடிந்ததும் முந்தைய ஒப்பந்தப்படி பா.ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்களில் பேசப்பட்டு வந்தது. ஆனால், அதற்குள் என்ன நடந்தது என்று தெரியவில்லை, நேற்று திடீரென யாரும் எதிர்பார்க்காத விதத்தில் தனது நிறுவனத்தின் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பார் என தனுஷ் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
யாரும் எதிர்பார்க்காத ஒரு சமயத்தில் இப்படி ஒரு அறிவிப்பு வருவதற்கான எந்த அறிகுறியும் இல்லாத ஒரு சூழலில் பா.ரஞ்சித்தின் அடுத்த படம் பற்றிய அறிவிப்பு பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. பா.ரஞ்சித்துடன் பணி புரிந்தது குறித்து ரஜினிகாந்த் மிகவும் திருப்திகரமாக இருந்ததாக அவரது குடும்பத்தினர் அனைவருமே ஒட்டு மொத்தமாக ரஞ்சித்தைப் பாராட்டினர்.
அதே சமயம் 'கபாலி' படத்தின் மூலம் சுமார் 300 கோடி ரூபாய் வரையில் தயாரிப்பாளர் தாணுவுக்கு வருமானம் என்று வந்த சூழ்நிலையில் ரஜினி குடும்பத்தினர் கலந்தாலோசித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மீண்டும் எளிமையான பட்ஜெட்டில் பா.ரஞ்சித் ஒரு படத்தை இயக்கட்டும், அதை தனது குடும்பத்தில் உள்ள ஒருவரே தயாரிக்கட்டும் என அவர்கள் முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதனால் தனுஷ் அவரது சொந்த நிறுவனத்தில் படத்தைத் தயாரிக்க, தயாரிப்புப் பணிகளை தனுஷின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும், மைத்துனி சௌந்தர்யா ரஜினிகாந்தும் கவனித்துக் கொள்ளட்டும் என ஆலோசித்துள்ளனர். அந்தப் படத்தின் மொத்த வரவு, செலவு அனைத்தும் ரஜினிகாந்த் குடும்பத்தையே சாரும்.
'கபாலி' படம் உருவாக செளந்தர்யா ரஜினிகாந்த் ஒரு முக்கிய காரணகர்த்தா என்பதால் மீண்டும் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பை எந்த மறுப்பேதும் சொல்லாமல் பா.ரஞ்சித்தும் ஏற்றுக் கொண்டார் என்கிறார்கள். ரஜினியை மீண்டும் இயக்க வாய்ப்பு வந்தால் யாராவது யோசிப்பார்களா என்ன ?.
பா.ரஞ்சித் - ரஜினிகாந்த் கூட்டணியில் மீண்டும் உருவாக உள்ள படம் 'கபாலி' படத்தின் இரண்டாம் பாகம் அல்ல, அது வேறு ஒரு புரட்சிகரமான கதை என்கிறார்கள்.