'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகும் தேனாண்டாள் பிலிம்சின் 100வது படமான சங்கமித்ராவை சுந்தர்.சி இயக்கயிருப்பது தெரிந்ததே. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் அந்த படத்தை சரித்திர பின்னணி கொண்ட கதையில் இயக்குகிறார் சுந்தர்.சி., பாகுபலியை மிஞ்சும் பிரமாண்ட படமாக உருவாகயிருக்கும் இந்த படத்தில் விஜய்யை நடிக்க வைக்கும் முயற்சி முதலில் நடந்தது. ஆனால் அவர் மறுத்து விடவே, பின்னர் சூர்யாவிடம் கால்சீட் கேட்டனர். அவரும் பிடிகொடுக்கவில்லை. அதனால் இப்போது ஜெயம்ரவியிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த நிலையில், சரித்திர கதைக்கு பொருத்தமான நடிகைகளை பட்டியலிட்டபோது அனுஷ்காதான் முதலிடம் பிடித்தாராம். ருத்ரம்மா தேவி, பாகுபலி என நடித்து விட்டு தற்போது பாகுபலி-2வில் மெகா வேடத்தில் நடித்து வரும் அனுஷ்கா, சங்கமித்ராவில் நடித்தால் தமிழ், தெலுங்கு இரண்டு பதிப்பிற்கும் அவரையே நடிக்க வைத்து விடலாம் என்று யோசித்துள்ளார்களாம். தற்போது அவர் நடித்து வரும் பாகுபலி-2 படப்பிடிப்பு விரைவில் முடியும் தருவாயில் இருப்பதோடு, சங்கமித்ரா இந்த ஆண்டு இறுதியில் தொடங்கயிருப்பதால் அனுஷ்காவின் கால்சீட் இந்த படத்திற்கு தாராளமாக கிடைத்து விடும் என்கிறார்கள்.