டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தற்போது சின்னத்திரை தொகுப்பாளினிகளில் பிரபலமானவர் ரம்யா. மணிரத்னத்தின் ஓ காதல் கண்மணி படத்தில் நடித்த பிறகு இன்னும் பிரபலமாகி விட்டார் அவர். இந்நிலையில் ரம்யாவின் டுவிட்டர் பக்கத்தில் இருந்து பிரபல விமர்சகர் ஒருவருக்கு தகாத கெட்ட வார்த்தைகள் கொண்ட டுவிட்டுகள் அனுப்பப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது.
ஆனால், அந்த டுவிட்களை ரம்யா அனுப்பவில்லையாம். யாரோ மர்ம நபர்கள் அவரது டுவிட்டருக்குள் சென்று தகாத வார்த்தைகளை பதிவு செய்து அதை அந்த விமர்சகருக்கு அனுப்பியுள்ளார்களாம். இதனால் அதிர்ச்சியடைந்த ரம்யா, இதுகுறித்து சம்பந்தப்பட்டவருக்கு விளக்கம் கொடுத்ததோடு, இது சம்பந்தமாக சைபர் க்ரைம் போலீசில் புகார் அளிக்கவும் முடிவு செய்துள்ளாராம்.