பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா |
சென்னை: அடுத்தாண்டு நடைபெற உள்ள தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் இளம் தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து போட்டியிடுவார்கள் என்று நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தெரிவித்தார்.
நடிகர் விஷால் தனது 39 பிறந்த நாளை இன்று கொண்டாடினார். தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நடந்த பிறந்த நாள் நிகழ்ச்சியில் நடிகர் சங்க நிர்வாகிகள் பலர் அவருக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளராக முதல் பிறந்த நாளை கொண்டாடுகிறேன். மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை குதிரை போல ஓடிக் கொண்டே இருப்போம். நாங்கள் யாரும் பதவி ஆசைக்காக வரவில்லை. நாங்கள் நடிகர் சங்க கட்டிடம் கட்டும் வரை போராடுவோம். கட்டி முடித்த பின்னர் துணை நடிகர்களின் வாழ்க்கை மிகவும் பிரகாசமாக இருக்கும்.
நடிகர் சங்கத்தில் ஊழல் என்ற பேச்சுக்கே நடிகர் சங்கத்தில் இடமில்லை. நாங்கள் பதவிக்கு வந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. நடிகர் சங்கத்தில் ஒரு குண்டுசிக்கு கூட சரியாக கணக்கு உள்ளது. நாங்கள் எங்களுக்கு பேனா தேவை என்று நடிகர் சங்கத்தில் இருந்து எடுத்தால் கூட பொருளாளர் கார்த்தி அதற்கு அனுமதிக்கமாட்டார். இங்கே ஊழல் என்ற விஷயத்துக்கு இடமே கிடையாது. ஊழல் குற்றச்சாட்டு கூறுபவர்கள் என்ன ஆதாரம் இருக்கிறதோ அதைக் கொண்டு வரட்டும்.
ஜனவரி 14, 2018-ம் தேதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்க தீர்மானித்திருக்கிறோம். கட்டிடம் கட்டிய அடுத்த முகூர்த்தத்தில் எனக்கு அக்கட்டிடத்தில் திருமணம் நடைபெறும்.
தயாரிப்பாளர் சங்கம் தொடர்பாக பல கேள்விகள் கேட்டு வருகிறோம். எந்தவொரு பதிலுமே இல்லை. ஆகையால், அடுத்த தேர்தலில் தயாரிப்பாளர்களாக இருக்கும் நடிகர்கள், இயக்குநர்கள் ஆகியோரை ஒன்று திரட்டி தேர்தலில் நிற்க முடிவு செய்திருக்கிறோம்.
நான் அரசியலுக்கு வருவேன் என்று யாரும் எண்ண வேண்டாம். அரசியலுக்கு வரும் எண்ணமெல்லாம் கிடையாது.