'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
எதையாவது புதுமையாக செய்தால்தான் சிறு படங்கள் மக்களை சென்று சேரும் என்பதுதான் இன்றைய நிலை. அதற்காக புதிய இயக்குனர்கள் புதிது புதிதாக எதையாவது செய்யத் துடிக்கிறார்கள். அந்த வரிசையில் குறும்பட இயக்குனர் ஏ.ஆர்.எஸ். சுந்தர் ஒரு படத்தை ஒரே அறைக்குள் படமாக்கி இருக்கிறார். படத்தின் பெயர் தாயம். சந்தோஷ் பிரதாப், அயிரா அகர்வால் என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். சதீஷ் இசை அமைத்துள்ளார், பாஹி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் பற்றி இயக்குனர் ஏ.ஆர்.எஸ் கூறியதாவது:
ஒரு அறைக்குள் நடக்கும் சம்பங்களை சொல்லும் சஸ்பென்ஸ் த்ரில்லர் படம். மொத்தமே 8 கேரக்டர்கள்தான். ஒரு அறைக்குள் அந்த 8 பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக வந்து போகிற போது நடக்கும் சம்பங்கள்தான் கதை. ஒரே அறைக்குள் நடக்கும் கதை என்பதால் போரடித்துவிடக்கூடாது என்பதற்காக திரைக்கதையில் நிறைய கவனம் செலுத்தியிருக்கிறேன். இது புதிய முயற்சி என்பதை விட கதைக்கான களம் அப்படி என்றுதான் சொல்ல வேண்டும். பின்னணி இசையும், ஒளிப்பதிவும் துணை செய்திருக்கிறது" என்கிறார் சுந்தர்.