கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
தமிழ் சினிமாவால் புறக்கணிக்கப்பட்டு, தெலுங்கில் வெற்றி பெற்ற நடிகைகளில் சமந்தா, அனுஷ்கா முக்கியமானவர்கள். அந்த வரிசையில் வந்தவர் ரகுல் ப்ரீத்தி சிங். தமிழில் ஆர்யா தம்பி சத்யாவுக்கு ஜோடியாக புத்தகம் படத்தில் நடித்தார். அதன் பிறகு தடையற தாக்க, என்னமோ ஏதோ படங்களில் நடித்தார். எந்த படமும் சரியாக ஓடவில்லை. அதனால் ராசியில்லாத நடிகை என்று முத்திரை குத்தப்பட்டு தெலுங்கு பக்கம் சென்றார். அங்கு அவர் நடித்த படங்கள் வெற்றியடைய முன்னணி நடிகை ஆனார்.
இந்த நிலையில் ரகுல் ப்ரீத் சிங் மீண்டும் தமிழுக்கு வருகிறார். மிஷ்கின் இயக்கும் துப்பறிவாளன் படத்தில் விஷால் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். மிஷ்கின் கமலஹாசனுக்காக எழுதிய கதையில் விஷால் நடிக்கிறார். அவரது உயரத்துக்கேற்ற நடிகை வேண்டும் என்ற தேடியதில் அனுஷ்கா தற்போது பிசியாக இருப்பதால் ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் செப்டம்பர் 14ந் தேதி முதல் தொடங்குகிறது. "தமிழில் நிறைய வாய்ப்புகள் வந்தும் நடிக்கவில்லை. தெலுங்கு படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்ததால் தேதி ஒதுக்கி கொடுக்க முடியவில்லை. தெலுங்கில் முக்கிய இடத்துக்கு வந்து விட்டதால் அதற்கு ஏற்ற மாதிரியான படங்களில் நடிக்க காத்திருந்தேன். அந்த வாய்ப்பு இப்போது அமைந்திருக்கிறது" என்கிறார் ரகுல் ப்ரீத் சிங்.