கேம் சேஞ்சர் படத்தில் மூன்று வில்லன்கள்? | ஒரே நேரத்தில் பஹத் பாசிலை வைத்து இரண்டு படங்களை தயாரிக்கும் ராஜமவுலி மகன்! | பெண்களால் முடியாதது எதுவுமில்லை! அண்ணா பல்கலை விழாவில் சூர்யா பேச்சு | கேரள ரசிகர்கள் தள்ளுமுள்ளு! விஜய்யின் கார் கண்ணாடி உடைந்தது!! | இறுதிக்கட்டத்தை நெருங்கிய ஜெயம் ரவியின் ஜீனி! | ஆண்ட்ரியாவுக்காக அடம்பிடித்த இயக்குனர் | ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாள படம்: மஞ்சும்மேல் பாய்ஸ் சாதனை | ‛உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு': 25வது ஆண்டு திருமண வாழ்க்கையை கொண்டாடிய அஜித் - ஷாலினி தம்பதி | பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! |
பாலிவுட்டில் பிரபல இயக்குநர்களில் ஒருவர் ரோஹித் ஷெட்டி. தற்போது ரோஹித் , கோல்மால் அகைன் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் அஜய் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அஜய் இயக்கி நடித்து வரும் சிவாய் படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. சிவாய் படம் அக்டோபர் மாதம் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. ரோஹித் ஷெட்டியிடம் பிரஸ் மீட்டில் அடுத்த படத்தை பற்றி கேட்டனர்.
இதற்கு பதில் கூறிய ரோஹித் ஷெட்டி " எனக்கு அஜய் தேவ்கன் மற்றும் அவரின் மனைவி கஜோலை வைத்து ஒரு காமெடி படம் இயக்க ஆசை . தற்போது இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் வகையிலான கதை என்னிடம் இல்லை. அவ்வாறு கதை எழுதியதும் இருவரையும் நடிக்க வைக்க ஆசைப்படுகிறேன். அந்தப்படம் ஒரு குடும்ப - காமெடி படமாக இருக்கும். ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தவாறு இருக்கும். அவர்கள் இருவரும் அப்படத்திலும் கணவன் மனைவியாக தான் நடிப்பார்கள் " என்றார்.
கோல்மால் அகைன் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று தெரிவித்து உள்ளனர்.