நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? |
விஜய் நடிப்பாரா ?, சூர்யா நடிப்பாரா ? என்று கடந்த சில வாரங்களாகவே சுந்தர் .சி அடுத்து இயக்க உள்ள பிரம்மாண்ட படத்தின் நாயகன் யார் என்பது பற்றிய பேச்சு இருந்து வந்தது. தற்போது அந்தப் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க உள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர் .சி படத்தின் கதையை ஜெயம் ரவியிடம் சொல்ல, கதையைக் கேட்ட ரவி உடனே நடிக்க சம்மதித்தார் என்றும் சொல்கிறார்கள். அது மட்டுமல்ல சுந்தர் .சியின் மனைவி குஷ்புவும், ஜெயம் ரவியின் மாமியாரும் நெருங்கிய தோழிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் மிகப் பெரும் பட்ஜெட்டில் தயாரிக்க உள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார். இந்தியாவின் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பணிபுரிய உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட உள்ளது. படத்தின் நாயகி யார், மற்ற நட்சத்திரங்கள் யார் என்பது பற்றியும் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம். இந்த ஆண்டுக் கடைசியில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.