தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
அரசியல் சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம், எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள தயார் என, நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார்.
நடிகர் சங்க நிர்வாகிகள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து நடிகர் சங்க தலைவர் நாசர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தென்னிந்திய நடிகர் சங்கத்தில் நாங்கள் பொறுப்புக்கு வந்த பின், மூத்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம், மருத்துவ முகாம், கல்வி உதவி, பி.யூ.சின்னப்பா நூற்றாண்டு விழா உள்ளிட்ட எண்ணற்ற, பல காரியங்களை செய்து முடித்துள்ளோம்.
எங்கள் செயல்பாட்டில் குறைகள், விமர்சனங்கள் இருந்தால் அதை தெளிவுப்படுத்த கடமைப்பட்டு உள்ளோம்.இதற்காக, நேர்மையாக சட்டப்படி எங்களை அணுகுவோரை மதித்து, தெளிவுப்படுத்த தயார். நேர்மையோடு உழைக்கும் இந்த நிர்வாகத்தை சீர்குலைக்க வேண்டும் என யாராவது நினைத்தால், அவர்களை விட இரண்டு மடங்கு பாய தயாராக உள்ளோம். தேவையில்லாமல், சங்கத்தின் மீது அரசியல் சாயம் பூசுவதை வன்மையாக கண்டிக்கிறோம். சங்கத்தில், சுயநலமாக செயல்பட்ட சிலரை தற்காலிகமாக நீக்க விளக்கம் கேட்டுள்ளோம்; சிலர் நீதிமன்றத்தை நாடியுள்ளனர். அவர்களில் சிலர், அலுவலக ஊழியர்களை தாக்கி உள்ளனர்; இதை, கண்டிக்கிறோம். சிறப்பு அவரச செயற்குழு கூட்டப்பட்டு, பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து நடிகர் சங்க நிர்வாகிகள் மீது சுமத்தப்பட்டு வரும் ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் சங்க தலைவர் நாசர் புகார் அளித்துள்ளார். அவதூறாக தகவல் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், எந்த குற்றச்சாட்டுக்களையும் எதிர்கொள்ள தயாராக உள்ளோம். ஆவணங்களில் எந்த ஒழிவு மறைவும் இல்லை. உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும் முறைப்படி வந்து எந்த ஆவணங்களை வேண்டுமானாலும் பார்க்கலாம்.
முந்தைய நிர்வாகம் மீது கூறப்பட்ட புகார்கள், குற்றச்சாட்டுக்கள் எதுவும் எங்கள் மீது வந்து விடக் கூடாது என ஒவ்வொன்றையும் கவனமாக செய்து வருகிறோம். முன்பை விட கூடுதலானவர்களுக்கு வேலை வழங்கப்பட்டுள்ளது. இப்போது குற்றம்சாட்டுவோர் முந்தைய நிர்வாகத்தினரின் தூண்டுதலால் செய்கிறார்களா என எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.