திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
வழக்கமாக கேரளாவில் முன்னணி நடிகர்களுக்கு இணையாக விஜய் படத்திற்கு வரவேற்பு இருக்கும். காரணம் மோகன்லால், மம்முட்டி, திலீப், பிருத்விராஜ் என அனைத்து நடிகர்களின் ரசிகர்களும் விஜய் படங்களை பார்க்கும் பட்டியலில் இருக்கிறார்கள். அதனாலேயே கடந்தமுறை கலைப்புலி தாணு தயாரிப்பில் விஜய் நடித்த 'தெறி' படத்தின் மலையாள உரிமையை மலையாள நடிகர் விஜய்பாபு தனது ப்ரைடே பிலிம் ஹவுஸ் நிறுவனம் மூலம் 5.6 கோடி ரூபாய் கொடுத்து கைப்பற்றினார். அதில் ஓரளவு லாபமும் பார்த்தார்.
இந்தமுறையும் விஜய்-60' படத்தை கைப்பற்றலாமா என விஜய்பாபு யோசனையல் இருக்க ஐ.எப்.ஏ.ஆர் இன்டர்நேஷனல் என்கிற நிறுவனம் இந்தப்படத்தின் உரிமையை கைப்பற்றியுள்ளதோடு, அதை தனது முகநூல் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாகவும் அறிவித்துவிட்டது. இந்தமுறை விஜய் படத்தின் வியாபாரம் 6.25 கோடி ரூபாய்க்கு முடிந்ததாக சொல்லப்படுகிறது. பரதன் இயக்கத்தில், சந்தோஷ் நாராயணன் இசையில் கீர்த்தி சுரேஷ், அபர்ணா வினோத் என இரண்டு நாயகிகள் நடித்துள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் முடிவடையும் என்றும் படம் பொங்கலுக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.