தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் விர் தாஸ் மற்றும் சோகா அலி கான் நடித்துள்ள 31 அக்டோபர் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அக்டோபர் 7ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளதாம். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 30ம் தேதியே இப்படத்தை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். ஆனால் அதற்குள் சென்சார் பிரச்னையில் இப்படம் சிக்கிக் கொண்டதால், செக்சார் போர்டு கூறி விதிகளின்படி படத்தை தயார் செய்து, பல முறை சென்சார் போர்டிடம் காட்டப்பட்டு, ஒப்புதல் பெறுவதற்கு இவ்வளவு தாமதம் ஆகி விட்டதாம். தற்போது ஒருவழியாக ரிலீஸ் தேதியையும் அறிவித்து வி்டடனர். முன்னாள் பிரதமர் இந்திரா கொல்லப்பட்ட பிறகு 1984ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தின் போது வீட்டிற்குள்ளேயே சிக்கிக் கொண்ட சீக்கிய குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 31 அக்டோபர் படம். இப்படத்தை சிவாஜி லோதன் பாட்டீல் இயக்கி உள்ளார்.