பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மலையாள படங்களில் நடித்துக்கொண்டிருந்த நயன்தாராவை தான் இயக்கிய ஐயா படம் மூலம் தமிழுக்கு கொண்டு வந்தவர் டைரக்டர் ஹரி. அந்த படத்தில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்த நயன்தாரா அப்படம் வெற்றி பெற்றதால் தமிழில் அடுத்தடுத்து புதிய படங்களில் புக்காகி முன்னணி நடிகையாகி விட்டார். அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஒரு பெரிய ரவுண்டு வந்து விட்டவர், தற்போது ஷோலோ ஹீரோயினி கதைகளில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சிங்கம்-3 படத்தை அடுத்து விக்ரம் நடிப்பில் சாமி-2வை இயக்கும் ஹரி, அந்த படத்தில் மீண்டும் நயன்தாராவுக்கு சான்ஸ் கொடுக்கயிருப்பதாக ஒரு செய்தி பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் அது பற்றி விசாரித்தால், சாமி-2 படத்தில் கண்டிப்பாக நயன்தாரா இல்லை என்கிறார்கள். காரணம், சிங்கம்-2 படத்தில் அஞ்சலி நடனமாடிய பாடலில் ஆட முதலில் நயன்தாராவைதான் அழைத்தாராம் ஹரி. ஆனால், அவர் குத்துப்பாடல்களுக்கு ஆடுவதில்லை என்று மறுத்து விட்டாராம்.
அதன்பிறகுதான் அந்த வாய்ப்பு அஞ்சலிக்கு சென்றிருக்கிறது. ஆனால் ஏற்கனவே ரஜினி, விஜய படங்களில் குத்துப்பாட்டுக்கு ஆடிய நயன்தாரா, தனது படத்தில் நடனமாட மறுத்து விட்டதால் இனிமேல் தனது படங்களில் அவரை நடிக்க வைக்கப்போவதில்லை என்று ஏற்கனவே முடிவெடுத்து விட்டாராம் ஹரி.