600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
"இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை காப்பாற்ற படம் இயக்க வேண்டாம். தங்களை காப்பாற்றிக் கொள்ள நல்ல படம் எடுத்தால் போதும்" என்று இயக்குனர் கே.பாக்யராஜ் கூறினார்.
தியா என்ற புதுமுகம் இயக்கி நடித்துள்ள படம் கன்னா பின்னா. அஞ்சலிராவ் ஹீரோயினாக நடித்துள்ளார். வில்சே இசை அமைத்துள்ளார், ஆர்.நாகராஜன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் பாடல் வெளியீட்டு விழா நடந்தது. தயாரிப்பாளர் சங்கத் தலைவர் தாணு வெளியிட இயக்குனர் கே.பாக்யராஜ் பெற்றுக் கொண்டார்.
பின்னர் விழாவில் கே.பாக்யராஜ் பேசியதாவது: தமிழ் சினிமாவுக்கு திருட்டு விசிடி பெரும் பிரச்னையாக இருப்பதாக கூறுகிறார்கள். திருட்டு விசிடி தயாரிப்பவர்களையும், விற்பவர்களையும் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் மக்கள் ரசிக்கும்படியான படத்தை எடுத்தால் மக்கள் தியேட்டருக்கு வந்து படம் பார்ப்பார்கள் என்பதை சமீபத்தில் வெற்றி பெற்ற சில சிறிய படங்கள் நிரூபித்துள்ளன. சமீபத்தில் வெளியான ஜோக்கர் படத்துக்கு நல்ல மவுத் டாக் கிடைத்து, இப்போது மக்கள் ஜோக்கரை பார்க்க தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். நல்ல படம் எடுத்தால் திருட்டு விசிடிக்களால் எதுவும் செய்ய முடியாது.
புதிய இயக்குனர்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். தயவு செய்து தயாரிப்பாளர்களை காப்பாற்ற வேண்டும் என்ற படம் இயக்காதீர்கள். ஒரு படத்தில் அவர்கள் நஷ்டம் அடைந்தால் அடுத்த படத்தில் அவர்கள் லாபம் சம்பாதித்துக் கொள்வார்கள். அதனால் உங்களை காப்பாற்றிக் கொள்ளும் விதமாக நல்ல படத்தை எடுங்கள். அது உங்களையும் காப்பாற்றும், தயாரிப்பாளர்களையும் காப்பாற்றும் என்றார்.