தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
மிருகம் படத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகர் ஆதிக்கு தமிழில் இன்னும் நேரம் வொர்க் அவுட்டாகவில்லை. பல படங்களில் நடித்தும் அவரால் முதல்வரிசைக்கு வர முடியவில்லை. கடைசியாய் அவர் நடித்த படம் 'யாகவராயினும் நா காக்கா'. இந்தப் படத்தை அவரது அப்பா தயாரித்தார். ஆதியின் சகோதரர் இயக்கினார். 'யாகவராயினும் நா காக்கா' படமும் தோல்வியடைந்தது.
இந்நிலையில், 'யாகவராயினும் நா காக்கா' படத்தைத் தொடர்ந்து ஆதி, நிக்கி கல்ராணி மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கிறார்கள். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ஏ.ஆர்.கே. சரவணன் என்பவர் இயக்குகிறார். இப்படத்திற்கு 'மரகத நாணயம்' என்று பெயரிட்டுள்ளனர்.
ஆடுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் படமாம் இது. எனவே, இந்த படத்திற்காக ஆடுகளை மையப்படுத்தி ஒரு பாடலை எழுதி பாடியிருக்கிறார் 'நெருப்புடா...' பாடல் புகழ அருண்ராஜா காமராஜ் . ஜமுனா பாரி, பீட்டல், பார்பாரி, தெல்லிச்சேரி, பெராரி என எல்லா ரக ஆடுகளின் பெயர்களையும் இப்பாடலில் உள்ளடக்கி எழுதி பாடியுள்ள அருண்ராஜா காமராஜ், இப்பாடலுக்காக ஆடுகளின் குரலை பிரத்தியேகமாக பதிவும் செய்துள்ளார். இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் திபு இசை அமைக்கிறார்.