பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இதற்காக 4 விதமான கிளைமாக்ஸை ராஜமௌலி படமாக்கியுள்ளார் என டோலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல் பாகத்தின் முடிவில் 'பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்றார் ?' என்ற கேள்வியுடன் படம் முடிந்தது. இரண்டாம் பாகத்தில் அதற்கான காரணம் என்ன என்பதைச் சொல்லியாக வேண்டும். முதல் பாகம் முடிந்த போது கூட அதற்கான காரணம் என்ன என்பது இயக்குனர் ராஜமௌலிக்குத் தெரியாதாம்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் படத்தின் கதை ஆசிரியரான விஜயயேந்திர பிரசாத், “அனைவருக்கும் கட்டப்பா பாகுபலியைக் குத்தினார் என்பது தெரியும். அதே சமயம் பாகுபலி உயிருடன் இருந்தாலும் இருக்கலாம்,” எனக் கூறியிருந்தார். அதனால் இரண்டாம் பாகத்தில் பாகுபலி உயிருடன் இருந்தாலும் இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மொத்தமாக முடிவடைந்ததும் எந்த கிளைமாக்ஸ் கதைக்கு மிகப் பொருத்தமாக இருக்கிறதோ அதை படத்தில் சேர்க்கலாம் என ராஜமௌலி முடிவெடுத்திருக்கிறாராம்.