பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
'நில் பத்தி சன்னாட்டா' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வினி ஐயர் திவாரி, அடுத்தப்படியாக ‛பார்லி கி பார்பி' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கிருத்தி சனோன், ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஆயுஸ்மான், பிரின்ட்டிங் பிரஸ் ஓனராகவும், ராஜ்குமார் எழுத்தாளராகவும், கிருத்தி, உபி பெண்ணாகவும் நடிக்கிறார்கள். ஜங்கிள் பிக்சர்ஸ் மற்றும் பிஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறார்கள். அக்டோபர் முதல்வாரத்திலிருந்து படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. நில் பத்தி சன்னாட்டா போன்றே இந்தப்படமும் ஒரு யதார்த்த படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.