டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
செல்வராகவனிடம் உதவியாளராக இருந்தவர் மித்ரன் ஜவஹர். செல்வராகவன் தெலுங்கில் இயக்கிய ஆடவரி மாட்டுலேகு அர்திலே வீரலே என்ற படத்தை தமிழில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்தார். அன்று தொடங்கிய அவரது ரீமேக் பயணம் இன்று வரை தொடர்கிறது. தெலுங்கு ஆர்யாவை குட்டி என்ற பெயரில் ரீமேக் செய்தார். ரெடி படத்தை உத்தம புத்திரன் என்ற பெயரில் ரீமேக் செய்தார். தற்போது மலையாள தட்டையன் மறயத்து படத்தை மீண்டும் ஒரு காதல் கதையாக ரீமேக் செய்துள்ளார். ஆனால் எனக்கு ரீமேக் செய்வதில் உடன்பாடில்லை. ரீமேக் செய்ய என்னை கட்டாயப்படுத்துகிறார்கள் என்கிறார் மித்ரன் ஜவஹர்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: என்னை பொறுத்த வரை ரீமேக் என்பது கடினமான ஒரு விஷயமாகும். ரீமேக் படங்கள் இயக்குவதில் எனக்கு எப்போதும் உடன்பாடு கிடையாது. யாரடி நீ மோகினி படம் வெளியான சமயத்தில் இருந்தே நான் இதை கூறி வருகிறேன். ஒரு படம் வெற்றி அடைந்துவிட்டால் அதைப்போன்று ஒரு படத்தை இயக்கும்படி எல்லோரும் கேட்பது இயல்பு. நான் இயக்கிய ரீமேக் படங்கள் வெற்றி பெற்றதால் என்னை மீண்டும் ரீமேக் படங்களை இயக்கும் படி எல்லோரும் கேட்கிறார்கள்.
ரீமேக் படம் என்றாலும் இப்படத்தில் என்னுடைய முத்திரை என்பது நிச்சயம் இருக்கும். இப்படத்தில் வேறு விதமான பாடல்கள் இருக்கும் , காட்சி அமைப்பு வேறு விதமாக இருக்கும். தட்டத்தின் மறையத்து படத்தின் மூலக்கதையை மட்டும் எடுத்துக்கொண்டு , படத்தை நாங்கள் வேறு விதமாக எடுத்துள்ளோம். மீண்டும் ஒரு காதல் கதைக்கு என்ன தேவையோ அதை நாங்கள் சரியாக செய்துள்ளோம்'' என்கிறார் மித்ரன் ஜவஹர்.