'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
ஓநாயும் ஆட்டுக்குட்டியும், சகுனி, டமால் டுமீல், கள்ளப்படம் உள்பட சுமார் 40 படங்களில் துணை நடிகராக நடித்திருப்பவர் இளவரசன். சரியான சினிமா வாய்ப்புகள் இல்லாததால் வறுமையில் வாடிய இவரால் தனது குடும்பத்தினரை காப்பாற்ற முடியவில்லை. இதனால் மனைவியும் கோபித்துக் கொண்டு சென்று விட்டார். அதோடு மனைவியை காப்பாற்ற முடியாத நீ எனக்கு வேண்டாம் என்ற விவாகரத்து நோட்டீசும் அனுப்பி இருந்தார். இதனால் மனம் நொந்த இளவரசன். துணை நடிகர்களை காப்பாற்றுங்கள் என்று கடிதம் எழதி வைத்து விட்டு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதை கேள்விப்பட்ட விஷால் தனது தேவி அறக்கட்டளை மூலம் 10 ஆயிரம் ரூபாயை தனது ரசிகர்மன்ற செயலாளர் ஹரியின் மூலம் இளவரசனுக்கு மருத்துவ உதவிக்காக வழங்கினார். இளவரசனின் மனக்குமுறலுக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் விஷால் தெரிவித்திருக்கிறார்.