விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
நான் ஈ படத்தில் தமிழுக்கு வந்தவர் கன்னட நடிகர் சுதீப். அதையடுத்து விஜய் நடித்த புலி படத்தில் நடித்தவர், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கிய முடிஞ்சா இவன புடி என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அதையடுத்தும் தொடர்ந்து தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளிலும் நாயகனாக நடிக்க ஆசைப்பட்டார். ஆனால் முடிஞ்சா இவன புடி படம் வெற்றி பெறாததால் சுதீப்பின் ஹீரோ ஆசை ஒர்க்அவுட்டாகவில்லை. அதனால் மறுபடியும் தமிழில் ஹீரோவாக நடிப்பதற்கு அவர் ஆசைப்படவில்லை.
அதேசமயம் வில்லனாக தமிழில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்பதில் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார் சுதீப். ஏற்கனவே விஜய்யுடன் புலி படத்தில் நடித்துவிட்ட அவர், அடுத்து அஜீத்துடன் நடிக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை தெரிவித்து வருகிறார். அதோடு, அஜீத்துடன் நான் இதுவரை நடிக்கவில்லை என்றபோதும் நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள். அவ்வப்போது சினிமா குறித்த விசயங்களை தொலைபேசியில் பகிர்ந்து கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார் சுதீப்.
ஆக, ஏற்கனவே கன்னட சினிமாவில் இருந்து தமிழுக்கு வந்து கொடி நாட்டி வரும் பிரகாஷ்ராஜ், கிஷோருக்கு அடுத்தபடியாக சுதீப்பும் இனிமேல் கோடம்பாக்கத்தில் நிரந்தர வில்லனாகி விடுவார் என்று தெரிகிறது.