பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி | புதுமுகங்கள் உருவாக்கும் ஹைப்பர்லிங் படம் | டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம் | 'பொன் ஒன்று கண்டேன்' விவகாரம் - 'ஆப்' ஆன வசந்த் ரவி | ரசிகர்களின் ஆபாச கமெண்ட் : விழாவைத் தவிர்த்த அனுபமா பரமேஸ்வரன் | ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' - 'ஜரகண்டி' பாடல், பிரம்மாண்டம் மட்டுமா ? |
தமிழ் சினிமாவின் ஆரம்பகால கட்டங்களில் நடிக்க வந்தவர்கள் அனைவரும் நாடகங்களில் இருந்து வந்தவர்கள். சிவாஜி, எம்.ஜி.ஆர், நம்பியார், எம்.ஆர்.ராதா, என்.எஸ்.கிருஷ்ணன் உள்பட பலரும் நாடகத்திலிருந்து வந்தார்கள். சிறுவயதிலேயே நாடக கம்பெனியில் சேர்ந்துவிடுவதால் இவர்கள் நிறைய படித்திருக்க மாட்டார்கள் எல்லாமே அனுபவம்தான். நடிப்பார்கள், பாடுவார்கள், கதை, வசனம் எழுதுவார்கள், இயக்குவார்கள்.
ஆனால் இதையெல்லாவற்றையும் தாண்டி சகல திறமைகளோடும் சகலகலா வல்லவனாக சினிமாவுக்கு வந்தவர் ரஞ்சன். 1941ம் ஆண்டு தியாகராஜ பாகவதர் நடித்த அசோக்குமார் படத்தில் சிறிய கேரக்டரில் அறிமுகமான ரஞ்சன், ஜெமினி எஸ்.எஸ்.வாசன் இயக்கிய சந்திரலேகா படத்தின் மூலம் புகழ்பெற்றார்.
அதன் பிறகு நீலமலைத் திருடன், மங்கம்மா சபதம் படங்களில் நடித்தார். இது தவிர தமிழில் இருந்து இந்திக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவரும் ரஞ்சன் தான். ரஞ்சன் ஒரு விமான பைலட், 7 மொழிகள் பேசக்கூடியவர், ஓவியர், வாள் சண்டை கலைஞர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், குதிரை ரேஸ் வீரர், முறைப்படி நடனம் கற்றவர். இசை அமைப்பாளர், பாடகர் இப்படி பன்முக திறமையோடு சினிமாவுக்கு வந்த முதல் ஹீரோ ரஞ்சன் தான்.