தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
உலக நாயகன் கமல்ஹாசனுக்கு உலகின் உயரிய விருதுகளில் ஒன்றான செவாலியே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாட்டில் வாழ்த்துக்களும், பாராட்டுகளும் குவிந்து வருகிறது. தமிழக முதல்வர் இதுவரை வாழ்த்து சொல்லாத நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன், கமலுக்கு தனது பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார் இது தொடர்பாக அவர் கமலுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
பன்முக திறமையாளரான (சகலகலா வல்லவன்) தங்களுக்கு செவாலியே விருது கிடைத்துள்ளதை அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன். இந்திய சினிமாவை உலக அளவில் பேச வைத்த தங்களது முயற்சிக்கு கிடைத்த பலன்தான் இந்த விருது. இந்த விருதை உங்கள் ரசிகர்களுக்கும், கலை ஆர்வலர்களுக்கும் சமர்பித்திருப்பது உங்கள் பணிவை காட்டுகிறது. இந்த விருதை பெற்றமைக்காக கேரள மக்களின் சார்பில் உங்களை மனதாரா பாராட்டுகிறேன் என்று கூறியிருக்கிறார்.