ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் காதலர்களாக வலம் வந்த ரன்பீர் கபூரும், கத்ரீனா கைப்பும் தற்போது பிரிந்து, இருவரும் வேறுவேறு பாதையை நோக்கி சென்றுவிட்டனர். இதனிடையே பாலிவுட்டின் மற்றுமொரு நடிகையான கரீனா கபூர், தற்போது கர்ப்பமாக உள்ளார். இருந்தும் அவ்வப்போது சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரீனாவிடம், ரன்பீர்-கத்ரீனா பிரிவை பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு இப்படி பதிலளித்திருக்கிறார் கரீனா.
எப்படி? - அதாவது, ‛‛இந்த இடத்தில் இது சம்பந்தம் இல்லாத கேள்வி, இங்கு நான் எதற்கு வந்தேனோ அதைப்பற்றி மட்டும் கேளுங்கள், மற்றதைப்பற்றி பேச வேண்டாம். என் தலை முடியை பாருங்க... எவ்வளவு அழகாக இருக்கிறது என்று ரன்பீர்-கத்ரீனா கேள்வியை தவிர்த்தார் கரீனா கபூர்.