ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகர், தற்போது ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார். ரன்பீர் கபூர், ஐஸ்வர்யா ராய், அனுஷ்கா சர்மா ஆகியோர் முதன்மை ரோலில் நடிக்கின்றனர். சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கரண் ஜோகர், ஏய் தில் ஹே முஷ்கில் படத்தில் ரன்பீரின் நடிப்பு அனுபவம் பற்றி புகழ்ந்து கூறினார்.
அதில் அவர் கூறியதாவது... ‛‛ரன்பீருடன் பணியாற்றியது ஒரு மிகச்சிறந்த அனுபவத்தை தந்தது. படத்தின் ஷூட்டிங்கின் போது சுமார் 20 காட்சிகளில் அவரது நடிப்பை மானிட்டரில் பார்த்து வியந்துவிட்டேன், கூடவே அவரை பாராட்டினேன். ரன்பீர் நிஜமாகவே ஒரு அசாத்தியமான நடிகர் என்று கூறியுள்ளார்.
ஏய் தில் ஹே முஷ்கில் படத்தின் டீசரை வருகிற 30ம் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். படம் இந்தாண்டு அக்டோபர் மாதம் 28-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.