அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
வடிவேலு நடித்த தெனாலிராமன் படத்தில் இளவரசியாக நடித்தவர் மீனாட்சி தீக்ஷித். அதன்பிறகு பெரிய ஹீரோக்களின் படங்களுக்காக முயற்சித்தார். ஆனால் அதற்கான கதவுகள் திறக்கப்படவில்லை. அதனால் சிறிய ஹீரோ படங்களில் நடித்தாவது மார்க்கெட்டில் இருப்போம் என்று டக்கர், பயம் ஒரு பயணம் என்ற இரண்டு படங்களில் நடித்து வந்தார். அதில் பயம் ஒரு பயணம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த படத்தில் கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த விசாகா சிங் பேய் வேடத்தில் நடித்திருக்கிறார். மீனாட்சி தீக்ஷித் நாயகியாக நடித்துள்ளார்.
கதைப்படி, நாயகன் பரத் ரெட்டியை பழிவாங்க வரும் விசாகா பேய், அவர் களது மகளை பழி வாங்கிச்செல்லும். அதோடு படத்தை முடிக்கும்போது அதே விசாகா சிங்கின் பேய் கெட்டப்பில் மீனாட்சி தீக்ஷித்தை காட்டி படத்தை முடித்திருக்கிறார் இயக்குனர் மணிஷர்மா. ஆக, பயம்-2வில் மீனாட்சி தீக்ஷித் பேய் வேடத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கிறது.