பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சூர்யா, ஸ்ருதிஹாசன், அனுஷ்கா, சூரி மற்றும் பலர் நடிக்க ஹரி இயக்கி வரும் 'எஸ் 3' படத்தின் கடைசிக் கட்டப் படப்பிடிப்பு மலேசியாவில் நடைபெற உள்ளதாகத் தெரிகிறது. தமிழ், தெலுங்கில் ஒரே சமயத்தில் உருவாக்கப்படும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாட்டில் நடக்கவேயில்லை. பெரும்பாலும் ஐதராபாத், விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் தான் நடந்தது. சென்னையில் நடைபெற்றதாக எந்தத் தகவலும் இல்லை. 'எஸ் 3' படத்தில் ஆந்திர போலீஸ் அதிகாரியாகவும் சூர்யா நடிப்பதால் தான் தெலுங்கு மக்களுக்குப் பிடிக்கும் விதத்தில் அங்கேயே படப்பிடிப்பை நடத்தியுள்ளார்கள்.
தமிழ் சினிமாவின் தற்போதைய டிரென்ட்படி மலேசியாவிலும் சில முக்கியக் காட்சிகளைப் படமாக்க உள்ளார்களாம். அனேகமாக, அந்தக் காட்சிகளில் சூர்யா பிரமோஷன் ஆகி சர்வதேச போலீஸ் அதிகாரியாக நடிக்கவே வாய்ப்புகள் அதிகம். முதல் இரண்டு பாகங்களில் தமிழ்நாடு போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யாவை மூன்றாம் பாகத்தில் பதவி உயர்வு கொடுத்தால்தானே அவருடைய ரசிகர்களுக்கும் பிடிக்கும். அதோடு, ஆந்திர போலீசுக்கும், தமிழ்நாடு போலீசுக்கும் சீருடையில் சிறிய மாற்றங்கள் இருக்கும். எனவே, ஒரு டப்பிங் படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக கவனமாகக் காட்சிகளை அமைத்துள்ளார்களாம்.
இந்தப் படம் மூலம் தமிழை விட தெலுங்கில் அதிகமாகக் காலூன்ற வேண்டும் என்று சூர்யா எதிர்பார்க்கிறாராம்.