இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் | ‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் |
பைவ் ஸ்டார் படத்தின் மூலம் அறிமுகமானவர் கனிகா. அதன் பிறகு ஆட்டோகிராப், வரலாறு உள்ளிட்ட ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். தமிழில் அதிக வாய்ப்பில்லை. இதனால் ஷியாம் ராமகிருஷ்ணனை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். மீண்டும் அவர் நடிக்க ஆசைப்பட்டபோது மலையாள சினிமா கனிகாவுக்கு வாய்ப்புகளை வாரி வழங்கியது. கடைசியாக ஓ காதல் கண்மணியில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
இதற்கிடையில் கனிகா தொடர்ந்து சினிமாவில் நடிப்பது அவரது கணவருக்கு பிடிக்கவில்லை என்றும் அதனால் அவர் கோபித்துக் கொண்டு சென்னையில் உள்ள தாய் வீட்டுக்கே வந்துவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்தது. இதனை கனிகா மறுத்துள்ளார்.
அவர் கூறியிருப்பதாவது: 8 வருடங்களுக்கு முன்பு என் கணவரை திருமணம் செய்து கொண்டபோது எப்படி அவரை காதலித்தேனோ அப்படியே இப்போதும் காதலிக்கிறேன். அந்த அன்பு எங்களிடம் குறையவே இல்லை. நான் காதலை நம்புகிறவள். என் கணவரை காதலிக்கிறேன். இணையதளங்களில் நான் கணவரை பிரிய போவதாக எழுதுகிறார்கள். அதில் எள்ளளவும் உண்மையில்லை. இணையதளங்களில் என்னை வம்புக்கு இழுக்கிறார்கள். தயவு செய்து அதனை நிறுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் கனிகா.