இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பிளஸ்-2 என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர்தான் சுஜாவாருனி. ஆனால் பின்னர் அவர் குத்துப்பாட்டு நடிகையாகி விட்டார். அதோடு கவர்ச்சிகரமான வேடங்களிலும் நடித்து வந்தார். ஆனால் தற்போது கவர்ச்சியை ஓரங்கட்டி விட்டு கேரக்டர் நடிகையாக வலம்வரத் தொடங்கியிருக்கிறார் சுஜா. அந்த வகையில், சேட்டை படத்திற்கு பிறகு அப்புச்சி கிராமம், பென்சில் ஆகிய படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களில் நடித்தார் சுஜா.
அதைத் தொடர்ந்து வைகை எக்ஸ்பிரஸ், கிடாரி, காதல் தீவு, அமளிதுமளி உள்பட பல படங்களில் கேரக்டர் நடிகையாக உருவெடுத்துள்ள அவர், கிடாரி படத்தில் சிறிய வேடம் என்றாலும் பேசப்படும் வேடத்தில் நடித்திருக்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது சுஜாவா இது என்ற ஆச்சர்யம் ரசிகர்களுக்கு ஏற்படும் என்று கூறும் சுஜா, இனிமேல் தொடர்ந்து சிறிய வேடங்கள் என்றாலும் கதைக்கு சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிக்க ஆசைப்படுகிறேன். அதோடு கேரக்டர்களுக்காக என்னை எந்த அளவுக்கு வேண்டுமானாலும் மாற்றிக்கொண்டு நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்கிறார் சுஜாவாருனி.