ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சிவகார்த்திகேயனுக்கு பிறகு விஜய் டிவியில் இருந்து சினிமாவுக்கு வந்த தொகுப்பாளர் மா.கா.பா.ஆனந்த். கழுகு கிருஷ்ணாவுடன் இணைந்து அவர் நடித்த வானவராயன் வல்லவராயன் படம் வெற்றி பெற்றது. ஆனால் அதையடுத்து அவர் சிங்கிள் ஹீரோவாக நடித்து வெளியான நவரச திலகம், அட்டி போன்ற படங்கள் தோல்விப்படங்களாகி விட்டன. இருப்பினும், மா.கா.பாவின் கைவசம் கடலை, மாணிக், பஞ்சு மிட்டாய் ஆகிய படங்கள் உள்ளன.
மேலும், தற்போது மா.கா.பாவின் சம்பளமும் 20 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில், அவர் நடிக்கும் புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க அமலாபாலிடம் பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், திருமணத்திற்கு பிறகும் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் அமலாபால், அந்த படத்தின் கதையைகூட கேட்காமல் ஹீரோ மா.கா.பா. ஆனந்த் என்பதை கேட்டதுமே நோ சொல்லி விட்டாராம். ஆனபோதும், அவருக்கு இணையாக இன்னொரு முன்னணி நடி கையை தனது புதிய படத்திற்கு புக் பண்ணி விட வேண்டும் என்று முன்வச்ச காலை பின் வைக்காமல் அடுத்தகட்ட முயற்சியில் இறங்கியிருக்கிறார் மா.கா.பா. ஆனந்த்.