பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சாமி, சிங்கம், தாமிரபரணி போன்ற ஹிட் படங்களை இயக்கியவர் ஹரி. தற்போது இவர் சூர்யாவை கொண்டு சிங்கம் படத்தின் மூன்றாம் பாகமான ‛எஸ்3'-யை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில், கார்த்தி, கருப்பசாமி என்ற இருவர் ஹரிக்கு போன் செய்து, வீட்டில் வெடிகுண்டு வீசப்படும் என்று மிரட்டல் விடுத்துள்ளனர். முதலில் நள்ளிரவு 2.30 மணிக்கு பேசிய இந்த இருவர் தொடர்ந்து காலை 7 மணியளவிலும் போன் செய்து மிரட்டியுள்ளனர்.
இதையடுத்து ஹரி, அருகில் உள்ள விருகம்பாக்கம் போலீஸில் புகார் கொடுத்துள்ளார். போலீசாரும் ஹரியின் புகாரை ஏற்று விசாரித்து வருகின்றனர். கார்த்தி, கருப்பசாமி இருவரும் ஹரியின் உறவினர்கள் என்று கூறப்படுகிறது. இவர்கள் ஹரி வீட்டிற்கு அருகிலேயே இருப்பதாகவும், இடப்பிரச்னை காரணமாக இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகவும் அதன் வெளிப்பாடாக ஹரிக்கு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.