பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை இலியானா, படத்தின் தயாரிப்பாளர் தனது பெயரை பயன்படுத்தி படத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். இது தொடர்பாக தயாரிப்பாளர் கவுரங் தோஷி மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் கூறி இருந்தார். தற்போது இந்த விவகாரம் மேலும் தீவிரமடைந்து, நிலைமையை மோசமாக்கி உள்ளது. இந்த விவகாரம் பற்றி தயாரிப்பாளர் கவுரங் தோஷி கூறுகையில், ஆன்கின் 2 படத்திற்கு இலியானா தேவையில்லை. ஏற்கனவே அமிதாப் பச்சன், அர்ஜூன் ராம்பால், அர்ஹத் வர்ஷி, அனில் கபூர் ஆகிய 4 பேர் இருக்கிறார்கள். இந்த படத்தை புரோமோட் செய்வதற்கு நடிகர்களின் பெயர்களை பயன்படுத்த வேண்டும் என்றால், ஆன்கின் 2 பட நடிகைகளான தீபிகா படுகோனே அல்லது கத்ரினா கைப் இடம் கேட்டிருப்போம். இலியானா ஒன்றும் பெரிய நடிகை இல்லை. இலியானாவுக்கு இந்த படம் பிடித்துப் போய், இப்படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்தார். அதே சமயம், தனது ஏஜன்சி சில களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதால் ஒரு வாரம் காத்திருக்கும்படியும் கூறினார். ஆனால் தற்போது அவர் இப்படி குற்றம்சாட்ட என்ன காரணம் என எனக்கு தெரியவில்லை என்றார்.