இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
பெப்ஸி உமாவுக்கு பிறகு ஏராளமான தொகுப்பாளினிகள் சேனல்களுக்கு வந்த போதும், ஓரிருவர்தான் அதில் பேசப்பட்டு வருகிறார்கள். அந்த வரிசையில் சமீபகாலமாக முன்னணி வகித்து வருபவர் விஜய் டிவி திவ்யதர்ஷினி. காபி வித் டிடி நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், தனது கலகலப்பான தொகுப்புகள் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்று வைத்திருக்கிறார்.
கடந்த ஆண்டு, விஜய் டிவியில் இருந்து டிடி வெளியேறி விட்டதாக ஒரு வதந்தி பரவியது. ஆனால் அதையடுத்து அவர் மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் அவர். ஆனால் தற்போது திவ்யதர்ஷினி-ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரனுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருவதாக இணையதளங்களில் செய்தி பரவியுள்ளது.
ஆனால் இதை திவ்யதர்ஷினிதரப்பு மறுத்துள்ளனர். திவ்யதர்ஷினி கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர்களுக்கிடையே எந்தவித பிரச்சினையும் இல்லை. இந்த செய்தியை யாரோ வேண்டுமென்றே பரப்பி விட்டுள்ளனர் என்கிறார்கள்.