ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
காப்பி கொடுத்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கும் நட்சத்திர தொகுப்பாளினி, சமீபத்தில் பல ஆண்டுகளாக காதலித்தவரையே திருமணம் செய்து கொண்டார். நன்றாகத்தான் போனது வாழ்க்கை. கணவர் உதவி இயக்குனராக இருந்தவர் சினிமாவில் ஜெயிக்க போராடுகிறவர். தனக்கு ஒரு வாய்ப்பு வாங்கித் தரும்படி மனைவியிடம் தொடர்ந்து வற்புறுத்தி வந்ததாகவும், அவரோ "நான் யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன் நீங்களேதான் வாய்ப்பு தேடிக் கொள்ள வேண்டும்" என்று கூறியதாகவும், இதனால் இருவருக்கும் இடையே மோதல் ஆரம்பித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் மனவருத்தம் என்று கூறப்படுகிறது. இது இப்போது பிரியும் அளவுக்கு வந்துவிட்டதாம். கடந்த 3 மாதமாக இருவரும் தனித்தனியாக வசிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.
"இந்த வதந்தியும் பொய்யாகி விட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்து கொள்வதை தவிர வேறு நாம் என்ன செய்ய..." என்கிறார்கள் தொகுப்பாளினிக்கு நெருக்கமானவர்கள்.