'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கோலிவுட் மட்டுமல்லாது டோலிவுட், பாலிவுட்டிலும் இயக்குநராக ஜொலித்தவர் பிரபுதேவா. இவர் இயக்கிய ‛ரவுடி ரத்தோர்', ‛ஆர்.ராஜ்குமார்' படங்கள் அவருக்கு ஹிட் படங்களாக அமைந்தன. அதன்பின்னர் அவர் இயக்கிய ஆக்ஷ்ன் ஜாக்சன், சிங்க் இஸ் பிலிங் படங்கள் பிரபுதேவாவிற்கு பெயரை பெற்று தரவில்லை.
இந்நிலையில் பிரபுதேவா, நடிகர் அபிஷேக் பச்சனை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாக செய்தி வெளியாகியுள்ளது. பிரபுதேவா சொன்ன கதை ஒன்று அபிஷேக் பச்சனுக்கு பிடித்ததையடுத்து அவர் இப்படத்தில் நடிக்க சம்மதம் சொல்லியிருக்கிறார் என்று கூறப்படுகிறது. மேலும் இப்படத்தை அபிஷேக் பச்சனின் தயாரிப்பு நிறுவனமான ஏ.பி கார்பரேஷன் தயாரிக்க இருப்பதாகவும், படத்திற்கு "லெப்டி" என்று பெயர் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.