தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தாண்டில் அக்ஷ்ய் குமார் நடிப்பில் ஏர்லிப்ட், ஹவுஸ்புல் 3 என இரண்டு படங்கள் வெளியாகி விட்டன. இரண்டு படங்களுமே ரூ.100 கோடி கிளப்பில் இணைந்துள்ளது. தொடர்ந்து இந்தவாரம் அக்ஷ்ய் குமாரின் ‛ருஸ்டம்' படம் வெளியாக இருக்கிறது. இதுவும் பாக்ஸ் ஆபிஸில் சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்ஷ்ய் குமாரின் படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்து வருவதால் அவர் தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
தற்போது அக்ஷ்ய், ‛ஜாலி எல்எல்பி 2' படத்தில் வக்கிலாக நடித்து வருகிறார். இப்படத்தில் இவர் தன்னுடைய சம்பளத்தை நாள் கணக்கில் வாங்கி கொள்வதாக கூறிவிட்டாராம். அதன்படி நாள் ஒன்றுக்கு அக்ஷ்ய் குமாருக்கு சம்பளம் ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது.
ஜாலி எல்எல்பி 2 படத்தில் அக்ஷ்ய், 40 முதல் 50 நாள் வரை ஷூட்டிங்கில் பங்கேற்கிறாராம். அப்படி பார்க்கையில் அவர் இந்தப்படத்திற்காக ரூ.40 முதல் 50 கோடி வரை சம்பளம் பெறுவார் என்று கூறப்படுகிறது.