ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரூ.6 கோடி என்ன அதற்கு மேல் கொடுத்தாலும் கல்யாணம், பிறந்தநாள் உள்ளிட்ட பார்ட்டிகளில் நான் ஆட மாட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகர் ஜான் ஆபிரஹாம். மாடலிங் துறையில் இருந்து சினிமாத்துறைக்கு வந்தவர் நடிகர் ஜான் ஆபிரஹாம். இந்தியில் முன்னணி நடிகராக உள்ளார். பொதுவாக பெரிய பணக்காரர்கள் தங்களது வீட்டு நிகழ்ச்சிகளில் பிரபல நடிகர், நடிகையரை அழைத்து நடனமாட வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்தவகையில் ஒரு பெரும் பணக்காரர் ஒருவர், ஜானை தன்னுடைய திருமண வந்து ஆடும்படி கேட்டுள்ளார். இதற்கு ஈடாக ரூ.6 கோடி தருவதாகவும் கூறியிருக்கிறார். ஆனால் ஜானோ முடியவே முடியாது என்று கூறிவிட்டாராம்.
இதுபற்றி அவர் கூறும்போது, பொதுவாக இதுபோன்ற அழைப்புகள் நிறைய வந்து கொண்டுதான் இருக்கிறது. இத்தனை கோடி தருகிறேன், அத்தனை கோடி தருகிறேன் என்று ஆசை வார்த்தை கூறுவர், ஆனால் நான் தான் எதையும் ஒப்புக்கொள்வது இல்லை. எத்தனை கோடி கொடுத்தாலும் திருமணம், பிறந்தநாள் விழாக்களில் ஆடமாட்டேன் என்பது என்னுடைய கொள்கை. அதே போன்று, மது மற்றும் சிகரெட் விளம்பரத்திலும் நடிக்க மாட்டேன். பலர் என்னிடம் இது போன்ற விழாக்களுக்கு வரும் அழைப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்துகின்றனர். ஒரு நடிகனை திரையில் தான் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். யார் என்றே தெரியாதவர்கள் வீட்டு விழாக்களில் நான் எப்படி ஆட முடியும் என்று ஆதங்கப்படுகிறார் ஜான்.