கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஏற்கனவே வாழ்ந்து மறைந்த பிரபலங்கள் பற்றி படம் எடுப்பது என்பது கண்ணிவெடிகள் புதைக்கப்பட்ட காட்டில் தினம் தினம் வாக்கிங் போய் வருவது மாதிரித்தான். எங்கே வெடி இருக்கும், எப்போது வெடிக்கும் என தெரியாது.. அதேபோல பிரபலங்களை பற்றி செவி வழியாக கேள்விப்பட்டவற்றை பற்றியோ அல்லது அவர்களே எழுதிய சுயசரிதையை மையப்படுத்தியோ படம் இயக்கும்போது ஆளாளுக்கு கேள்வி கேட்கும் அபாயம் உண்டு.. புதுப்புது சர்ச்சைகள் வெடிக்கும் சூழலும் உண்டு.. இது அனைத்தையும் உணர்ந்தே தான் பிரபல மலையாள இயக்குனர் கமல் பாலிவுட் நடிகை வித்யாபாலனை வைத்து தான் இயக்கி வரும் 'கமலா சுரையா' படத்திற்கு எந்த சர்ச்சைகள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறாராம்.
வித்யாபாலனையே நடிக்க ஒப்புக்கொள்ள வைத்த இந்த கமலா சுரையா யார் என்ற கேள்வி உங்களுக்கு தோன்றலாம். கேரளாவில் பாரம்பரியமிக்க நாயர் குடும்பத்தில் கமலாவாக பிறந்து நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரும்பிப்பார்க்க வைத்த எழுத்தாளராக உருவெடுத்து, இஸ்லாமல் ஈர்க்கப்பட்டு தனது 67வது வயதில் இஸ்லாமிய மதத்திற்கு கமலா சுரையாவாக மாறிய பெண்மையின் சுயசரிதையைத்தான் படமாக இயக்குகிறார் கமல். இதில் கூடக்குறைய எது இருந்தாலும் இரண்டு மதத்தினர் மத்தியில் சலசலப்பை உண்டாக்கிவிடும் என்பதில் கவனமாக இருக்கிறாராம் இயக்குனர் கமல்.