'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இந்தி பிக் பி அமிதாப்பச்சன் மும்பையில் உள்ள தனது பங்களாவில் வசித்து வருகிறார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை காலையிலும் அமிதாப்பச்சன் ஏற்கெனவே அப்பாய்ன்மெண்ட் வாங்கியருக்கும் தனது ரசிகர்களை சந்தித்து பேசுவார். மதியத்துக்குள் இந்த நிகழ்ச்சி முடிந்து விடும்.
கடந்த ஞாயிற்றுக்கிழமையும் இதுபோன்ற நிகழ்ச்சி ஒன்று நடந்தது. சந்திப்பு நிகழ்ச்சி முடிந்து அனைவரும் வெளியே சென்றதும், திடீரென ஒரு வாலிபர் சுவர் ஏறி குதித்து அமிதாப்பை நோக்கி ஓடினார். அவரை வீட்டு காவலர்கள் துரத்தி பிடித்தனர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் அவரை அழைத்து கொண்டு போய் போலீஸ் நிலையத்தில் 'உரிய முறையில்' விசாரித்தனர். அப்போது அவர் பெயர் பன்வாரி லால் திவாரி என்பதும். 25 வயது இளைஞரான அவர் மேடை பாடகர் என்பதும், அமிதாப்பிடம் பாடிக்காட்டி சினிமா வாய்ப்பு பெற வந்ததும் தெரிய வந்தது.
ஆனாலும் பாதுகாப்பு வளையத்தை மீறி ஒரு விவிஐபி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததால் அவரை போலீசார் கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் உடனடியாக ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.